Ads Area

கொரோனா வைரஸ் தொற்றினால் சவுதி அரேபியாவில் இரண்டாவது மரணம்.

உலகை ஆட்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வரும் கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மற்றுமொருவர் சவுதி அரேபியாவில்  மரணமடைந்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.

வளைகுடா நாடுகளிலும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு சவுதி அரேபியாவில் இதுவரை 900 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற வேளை 28 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க சவுதி அரேபியால் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மக்கா - மதீனா - றியாத் நகரங்களை தற்போது முற்றாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதடிப்படையில் மேற்கூறிய 3 நகரங்களுக்குமான ஊரடங்குச் சட்டம் பகல் 3. மணியில் இருந்து காலை 6. மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னர் ஊரடங்குச் சட்டம் மாலை 7 மணியில் இருந்து தொடங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

அதே போல் ஏனைய நகரங்களில் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி இருந்து காலை 6 மணி வரை இவ்வூரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe