Ads Area

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் மாநகர சபை அனுசரணையுடன் சிற்றுண்டிச்சாலை..!

கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை இன்று செவ்வாய்க்கிழமை (06) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதிபதிகள், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நீதிமன்றங்களின் பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பல நீதிமன்றங்கள் இயங்கி வருகின்ற கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் வசதியான சிற்றுண்டிச்சாலை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இத்தேவையை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்து கொடுத்தமைக்காக மாநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe