ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தேசத்தை சுத்தமாக வைத்திருப்போம் கிழக்கு மாகாணத்தில் 'சேர்ந்து காப்போம் கிழக்கு' எனும் தொனிப்பொருளில் பாதையில் குப்பை போட வேண்டாம் எனும் விசேட வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன இணைந்து சம்மாந்துறை பிரதான வீதியில் குப்பைகளை அகற்றி துப்பரவு செய்யும் சிரமதானத்தினை மேற்கொண்டனர்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.