Ads Area

மழை நீரின் மூலம் பாதுகாப்பான நீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு.


இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து நடத்தும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான நீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு இன்று புதன்கிழமை (28) பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. 

இந்நிகழ்வுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அமைச்சர் தினேஷ் குணவர்தன,  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி க்ளெடியா சடோப் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர். 

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கலாநிதி ஹேரத் மன்திலக்க சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், நெதர்லாந்து, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe