இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து நடத்தும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான நீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு இன்று புதன்கிழமை (28) பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கலாநிதி ஹேரத் மன்திலக்க சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், நெதர்லாந்து, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.