அஹமட் சாஜித்.
மாவடிப்பள்ளியில் நீ்ண்டகாலமாக திருத்தப்படாதிருந்த மாவடிப்பள்ளி மத்திய வீதியின் திருத்தப் பணிகள் மற்றும் வடிகான் வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தலைவர் கௌரவ ரிசாத் பத்தியுத்தீன் அவர்களினால் புணர்நிர்மானம் செய்யப்படுகின்றது.
குறித்த வீதியின் திருத்தப் பணிகள் தொடர்பாக அப் பிரதேச மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் எந்த வித பலனும் கிடைக்கவில்லை குறித்த விடையம் தொடர்பாக ரிசாத் பதியுத்தீனிடம் அவர்களிடம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தினை தொடர்ந்து மத்திய வீதியின் திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
அதே போன்று மாவடிப்பள்ளி தபாலக வீதியும் கௌரவ ரிசாத் பதியுத்தீனின் அவர்களின் நிதியொதுக்கீட்டில் திருத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.