Ads Area

மீண்டும் மஹிந்த அரசில் இணைந்தார் வடிவேல் சுரேஷ்..???

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்றையை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தார். 

பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த 14 ஆம் திகதி அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று நடைபெறுகின்ற அமைச்சரவை கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஐக்கியத் தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்சும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இருந்த போதும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசோடு இணைந்து விட்டார்களா என்ற உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe