(காரைதீவு நிருபர் சகா)
நீண்டகாலமாக எதிர்பார்ப்புடன் காத்திருந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 134 மூவின கற்றறக்ட் நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
லண்டன் அறிவொளி வளைய அனுசரணையுடன் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து புனர்வாழ்வும் புதுவாழ்வும் (Assist RR) அமைப்பு விஷன் 2020(VISION 2020) திட்டத்தின்கீழ் இந்த கற்றறக்ட் சத்திரசிகிச்சைமுகாமை வவுனியாவில் நடாத்தியது.
புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் லண்டன் பணிப்பாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பொருளாளர் எந்திரி கே.சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இப்படிப்பட்ட இந்த மக்களுக்கு இந்த கற்றறக்ட் முகாம் பெரிய வரப்பிரசாதமாகத்திகழ்ந்தது என பயன்பெற்ற நோயாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.