Ads Area

மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு.

மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையுத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இதுபோன்ற தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என்றும் மனுதாரர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe