Ads Area

சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்.

ஏ.ஜே.எம்.ஹனீபா.

சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார் நேற்று முந்தினம் (18) கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் சேவை யின் தரம் - II இனை கொண்ட இவர் கமு/சது கஸ்ஸாலி முஸ்லீம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலேயே அல்-முனீர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டார். மேலும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe