காரைதீவு நிருபர் சகா.
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொத. சா.தரப்பரீடசைப்பெறுபேறு 100வீத சித்தியை பெற்றிருப்பதாக அதிபர் எம்.விஜயகுமாரன் தெரிவித்தார்.
12மாணவர்கள் பரீட்சைக்குத்தோற்றியதில் 12 பேருமே க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருப்பதாக அவர் கூறுகிறார்.
வரலாற்றில் பாடரீதியாக கூடுதல் சித்திபெற்றிருப்பது மற்றுமொரு சாதனை என்கிறார்.
விஞ்ஞானப்பாடத்தில் 100வீத சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை தமிழ் வரலாறு ஆகிய பாடங்களில் 91வீத சித்தியும் கணிதத்தில் 83வீதசித்தியும் ஆங்கிலத்தில் 67வீத சித்தியும் பெறப்பட்டிருக்கிறது.சைவநெறி கத்தோலிக்க சமயத்திலும் 100வீத சித்திபெறப்பட்டிருக்கிறது.

