ஹசலக பொலிசாரால் தர்ம சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது ஊடாக இரு சமூகங்களுக்கிடையிலே இன முறுகளை ஏற்படுத்தியமைக்காக அப்பாவி முஸ்லிம் பெண்ணை கடந்த 14 நாட்களாக மகியங்கனை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததமை நீங்கள் அறிந்த விடயமே.
" குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரம் அல்ல அது கப்பலின் சுக்கான் ( steering wheel ) ஆகும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எம்மால் கொண்டு வரப்பட்டது.
அத்துடன் பிரித்தானிய பிரஜை Coleman தொடர்பான tattoo வழக்கின் தீர்ப்பினை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். போலீசாரின் வேண்டுக்கோளுக்கிணங்க குறித்த ஆடை ஆனது பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்திற்கும் தர நிர்ணய சபைக்கும் அறிக்கைக்காக அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
" 10 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட அந்த கிராமத்திற்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவே இவ்வாறு மேற்கொண்டோம்" என்று பதிலளித்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் வழக்கில் எமக்கு சார்பாக இருந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி பிணைக்கோரிக்கை முன் வைத்தோம்.
ஆனால் இவ்வழக்கானது ICCPR சட்டத்தன் கீழ் பொலிசாரினால் தொடுக்கப்பட்டருப்பதால் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என எமது பிணை கோரிக்கையை நிராகரித்து வழக்கை எதிர்வரும் 03/06/2019 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இவ்வழக்கில் என்னுடன் எனது மனைவி சட்டத்தரணி நுஸ்ரா சறூக் மன்றில் தோன்றினோம்.
சட்டத்தரணி சறூக்
0771884448