ஏ.ஜே.எம்.ஹனீபா
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் “நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோம்" தேசிய வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை 6 திகதி முதல் 11ம் திகதி சனிக்க்கிழமை வரை சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு இன்று (6) திங்கட்கிழமை சம்மாந்துறை -10, 11, 12, கருவட்டுக்கல் - 01 ஆகிய கிராம சேவகர்கள் பிரிவை சேர்ந்த சமூர்த்தி நலனுதவிக் குடும்பங்கள், மற்றும் நலனுதவி பெறாத குடும்பங்கள் ஆகியோர் சம்மாந்துறை மஸ்ஜிதுல் கைர் பள்ளிவாசலில் மாபெரும் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உதவி பிரதேச செயலாளர் ஆசீக் முஹம்மட், கைர் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஜே.எம்.ஹனீபா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.