அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை குற்றவாளியாக நிரூபிக்கப்படாத ஒருவரை பதவி விலகுமாறு எவ்வாறு கூற முடியும்?
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி
எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மூன்றாவது நாளக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
எனினும், தாம் பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பதவி விலக மாட்டேன். அவ்வாறு பதவி விலகும் எண்ணம் கிடையாது” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.