Ads Area

அம்பாறை மாவட்டமெங்கும் ஜே.வி.பி.யின் சுவரொட்டிகள்!

பாறுாக் சிஹான்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவின் ஒளிப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு நேற்று (சனிக்கிழமை) மாலை கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு திடீரென ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள், அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சுவரொட்டிகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe