இம் முறை ஹஜ் யாத்திரிகர்களுக்கு 8 மில்லியன் குர்ஆன் பிரதிகளை சவூதி அரேபியா விநியோகித்துள்ளது.
ஹஜ் காலத்தை முன்னிட்டு இஸ்லாமிய விவகார, தஹ்வா மற்றும் வழிகாட்டல் அமைச்சு குர்ஆன்களை விநியோகிக்கும் செயற்பாட்டை தொடங்கியது. சவூதிக்கு ஹஜ் யாத்திரிகர்கள் வரும்போது அவர்களை குர்ஆனைக் கொடுத்து வரவேற்பது ஒரு சம்பிரதாயமாகும். அதனடிப்படையில் அவ்வமைச்சு மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன்களையும் யாத்திரிகர்களுக்கு வழங்கியுள்ளது. இறுதியாக யாத்திரிகர்கள் கடமைகளுக்காக புறப்படுவதற்கு முன்னரே குர்ஆன் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் நூலினை பெற்றுக் கொள்வர்.
வெளியீட்டு விவகாரம் மற்றும் கல்விசார் ஆய்வுத் திணைக்களத்தின் செயலாளர் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அல் ஹம்தான் தெரிவித்ததன்படி ஹஜ் காலத்திற்காக வேண்டி இந்த வருடம் 30 மொழிகளில் 52 வகையான நூல்கள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் 8 மில்லியன் பிரதிகள், பாரம்பரிய நூல்கள், மற்றும் வழிகாட்டல் நூல்கள் என்பன ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்.ஏ.எம். அஹ்ஸன்

