Ads Area

எப்படித்தான் மனம் வருகிறதோ..!! பெற்ற மகளே தாயை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க பத்திரகாளி என்ற பாட்டியை பெற்ற மகளே அழியாநிலை பஞ்சுமில் பேருந்து நிறுத்தத்தில் விட்டு சென்ற அவலம் இடம் பெற்றுள்ளது.

இப்பாட்டியை விசாரித்ததில் அவரது பெயரையும் ஊரையும் கூறிவிட்டு எனது மகள் பெயர் சித்ரா என்றும் என் மகளே என்னை இங்கு விட்டு சென்றாள் என்று கண்களில் நீர் வழிய சொல்லியுள்ளார்.

எனக்கு மகள் இருந்தும் உறவினர் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை எனவும் எனக்கு யாருமே இல்லை என்று விதி அவ்வளவுதான என தவித்தித் கொண்டிருந்த பத்திரகாளி பாட்டிக்கு இனி உங்களின் இறுதி காலம் வரை உங்கள் பிள்ளையாய் நான் இருக்கிறேன் என்னுடன் வாருங்கள் என கூறி OUR HOME TRUST அறக்கட்டளையின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள் இப்பாட்டியை அழைத்து வந்து தற்போது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகின்றார்.

பத்திரகாளி பாட்டியை ஏற்க நினைத்தால் தயவுசெய்து நமது இல்லம் அறக்கட்டளை முகவரியினை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தயவுசெய்து நண்பர்கள் இப்பதிவினை தவறாமல் பகிரவும் 
என அன்போடு வேண்டுகிறோம். 

என்றும் அறப்பணியில்.....
நமது இல்லம் அறக்கட்டளை 
(ஆதரவற்றவர்களின் அரவணைப்பு இல்லம்)
புதுக்கோட்டை ரோடு, அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் , அறந்தாங்கி 
புதுக்கோட்டை (மாவட்டம்)

தலைமை சேவகர்:M.சந்திரசேகரன் 
-9965949490 (வாட்ஸாப்)
-9080936054,

அலுவலகம் - 9688880493.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe