சாபி மீதான குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரம் இல்லை, மாற்று வழியில் விசாரணை
குருநாகல் வைத்தியர் சாபி சிஹாப்தீன், கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளமைக்கான சாட்சிகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லையெனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எஸ்.பி. திசேரா நேற்று (09) நீதிமன்றில் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக நிபுணத்துவ சபையின் அறிக்கையானது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்று என்பதுடன் இதுவே சிறந்த நடை முறையென்றும் தெரிவித்த அவர், வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளார்.
இந்த அறிக்கை விரைவாக கிடைக்கப்பெற்றால், வழக்கு ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக வழக்கை விசாரணைக்குக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும் நீதிபதி நேற்று கூறியுள்ளார்.

