(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முழுமையான நிர்வாகச் செயற்பாட்டை நாம் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுத்தருவோம் என நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
இன்று (22) கல்முனை நகருக்கு வருகைதந்தார். நகரின் பல இடங்களுக்கும் சென்று தமிழ் – முஸ்லிம் மக்களை சந்தித்து அவர் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
தமிழ் பிரதேசங்களுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கோவில்களுக்கும் சென்று சமய வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ காலத்தில் அதிகமாக தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தோம். ஆனால் இன்று தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தொடர்வோம். ஏழு மாகாணங்களிலும் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

