இன்று (20) நள்ளிரவு முதல் தற்காலிகமாக 450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாணின் விலை மட்டுமே அதிகரிக்கப்படுவதாகவும் ஏனைய சிறிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.