டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அபாய அளவைத் தாண்டியது. காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காற்று மாசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பலர் மாஸ்க் அணிந்து வெளியில் செல்வதைக் காண முடிகிறது.
இதேபோல் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.