Ads Area

ரூ.1.25 கோடி மதிப்பிலான மண்ணுளிப் பாம்பை சட்டவிரோதமாக விற்க முயன்ற 5 பேர் கைது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து, ஒப்பனைப்பொருள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் மண்ணுளிப் பாம்புக்கு, சர்வதேசச் சந்தையில் தேவை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கார் பகுதியில், மண்ணுளி பாம்பை, சிலர் விற்பனை செய்ய முயல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்ததுடன், 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சேஹோர் (Sehore) மாவட்டத்தில் இருந்து மண்ணுளி பாம்பை வாங்கிவந்து நர்சிங்கார் பகுதியில் அவர்கள் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe