Ads Area

ஜமால் கசோகியின் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை.



சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கி  நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். 

சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கசோகி கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து ஜமால் கசோகி கொலை தொடர்பான விசாரணைக்கு சவுதி அரசு உத்தரவிட்டது. 


இந்நிலையில், ஜமால் கசோகி கொல்லப்பட்டதில் நேரடி தொடர்புள்ள 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe