Ads Area

மல்வத்தை ”அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால்” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

தகவல் - கே.எஸ் மோகன் (ஆசிரியர்)

மல்வத்தை ”அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால்” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. 

அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் மல்வத்தை பிரதேசத்தில் இடம் பெற்றது.

பல சமூகப் பணிகளைச் செய்து வரும் அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பின் இளைஞர்களினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலை மாணவ-மாணவிகளுக்கு அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோடிஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில்  மல்வத்தை பிரதேசத்தின் மூத்த ஆசானும், முதலாவது விஞ்ஞான ஆசிரியரும், அதிபருமான திரு.பொ. நடராஜன் அவர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe