நூருல் ஹுதா உமர் -
தற்போதைய வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டும் பிரதேசத்தில் நிலவிய துர்நாற்றத்தை கவனத்தில் கொண்டும் மக்களால் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களுக்கு செவிசாய்த்து கல்முனை மாநகர சபையும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவருகிறது.
இத்தோனா ஆழமாக்கப்படுவதன் மூலம் வெள்ள நீர் யாவும் இத்தோணாவினால் முழுமையாக உள்வாங்கப்பட்டு, கடலுக்கு செலுத்தப்படும். இதனால் சாய்ந்தமருது பிரதேசம் மாத்திரமல்லாமல் மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசங்களும் பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்புப்பெறுகிறது.