(எம்.எம்.ஜபீர்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
கடந்த வருடம் கடமையிலிருந்த அமரர் கணேஸ் தினேஸ் மற்றும் அமரர் நிரோசன் இந்திக்க பிரசன்ன ஆகியோர்கள் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நினைவாக பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.