Ads Area

சவுதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு - உங்களது சம்பளம் தொடர்பாக தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு !

2020 மார்ச் 01 முதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உங்களது வேலை ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது சம்பளம் வழங்கப்படாதிருந்தாலோ சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் துாதரகத்திற்கு முறையிடலாம்.

அதற்காக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் துாதரகம் மேற் கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கை தொழிலாளர்களின் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றது.

அப்படியானவர்கள் யாராவது இருப்பின் கீழ்வரும் இணைப்பினூடாக தரப்பட்டுள்ள இணைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இயன்றவரை அவசரமாக அனுப்பி வைக்கும்படி இலங்கைத் துாகேட்டுக் கொண்டுள்ளது.

தகவல்.

இலங்கை தூதரகம்
ரியாத்
14 ஏப்ரல் 2020

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe