சவுதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டள்ள 24 மணிநேர ஊரடங்கு உத்தரவினால் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள சவுதியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அவர்களது தேவையறிந்து, அவர்களுக்கான நிவாரணங்களை சவுதி றியாத் நகரில் உள்ள இலங்கைத் துாதரகம் வழங்கி வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கான வரையரைகள் இருந்த போதிலும் கூட மிகவும் தேவையுடையவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் துாதரகம் இறங்கியுள்ளது.
இருப்பினும், ரியாத் மற்றும் தமாமின் புறநகர் பகுதிகளின் தொலைதூர இடங்களிலுள்ள கஷ்டப்படுகின்ற இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவது சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் துாதரகத்தின் மனிதாபிமான கடமைகளைச் செய்வதற்கு எவ்வித இடையூறுமில்லாமல் தூதரக அதிகாரிகள் தொலை துார இடங்களுக்குச் செல்ல வசதி செய்து தருமாறு இலங்கைத் தூதரகம் சவூதி அரசிடம் கோரியுள்ளது.
தகவல் - இலங்கைத் துாதரகம் (றியாத்)