நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது மக்களுக்கான நிவாரண உதவித்தொகை விநியோகம் இன்று வியாழக்கிழமை (23.04.2020) காலை 10.30 மணியளவில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 1329 பேர்களுக்கான நிவாரணப் உதவித்தொகை குறித்த 18 பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு தலா 1500 ரூபாய் அடங்கிய நிவாரண உதவித்தொகை விநியோகிக்கும் ஏற்பாடுகளினை குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகங்களே பொறுபேற்று தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்க உள்ளது.