காரைதீவு சகா.
சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபையின் நிதிப்பங்களிப்புடன் நேற்று (18) நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள சம்மாந்துறை கோரக்கல் கிராம குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்ன.
இதில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலய அறங்காவர் சபையின் தலைவர் எஸ்.சுபரமணியம் செயலாளர் யோ.கிருஸ்ணமூர்த்தி பொருளாளர் k.கனகராஜா ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் இளம்விஞ்ஞானியும் கோரக்கல் கிராம இளைஞருமான வினோஜ்குமார் மற்றும் பல கிராம இளைஞர்கள் பங்குபற்றி நிவாரணப்பொருட்களை வீடுவீடாக விழங்கி வைத்தனர்.