பாறுக் ஷிஹான்
போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சர்வதேச போதை ஒழிப்பு வாரமாக 2020 ஜூன் 20 தொடக்கம் 2020 ஜூலை 2 ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மதுவரிநிலையமும் கடந்த 4 நாட்களாக இவ்வாரத்தை முன்னிட்டு பொதுமக்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பதற்காக விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதற்கமைய இவ்வாரத்தின இறுதி நாளான நேற்று (2) கல்முனை பிராந்திய மதுவரி திணைக்களத்திற்கு உட்பட்ட கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொது இடங்களில் இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.