சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிகளை நுழைவாயில்களில் இடைநிறுத்தி வியாபாரிகளையும், வாகனங்களையும் பதிவு செய்வதோடு தொற்று நீக்கி, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமையினை உறுதிப்படுத்திய வியாபார அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கை விடுமுறை தினங்களும் முன்னெடுக்கப்படுகின்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம். முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேசத்தின் நுழைவாயில்களான நெல்லுப்பிடிச் சந்தி, வங்களாவடி, வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தொற்று நீக்கி, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமையினை உறுதிப்படுத்தி வியாபார அனுமதி அட்டை வழங்கு நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.