Ads Area

சவுதியில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்தவருக்கு 40 ஆயிரம் ரியால் அபராதம் விதிப்பு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் சவுதி அரேபிய குடிமகன் ஒருவரின் உதவியுடன் சட்டவிரோதமாக சலவை இயந்திர உதிரிப்பாகங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 40 ஆயிரம் ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறியவருவதாவது,

சவுதி அரேபிய குடிமகன் ஒருவரின் உதவியோடு சிரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சின் எவ்வித உத்தியோகபூர்வ ஆவணங்களுமின்றி சலவை இயந்திர (washing machines) உதிரிப்பாகங்கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறான தொழிலில் ஈடுபட்டு வந்த சிரிய நாட்டவரும் அவருக்கு உதவிய சவுதி நாட்டவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 40 ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது வர்த்தக நிலையமும் மூடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் வியாபாரம் செய்வதற்கு எவ்வித தடையும் கிடையாது ஆனால் முறையான ஆவணங்கள் மற்றும் அரசாங்க அனுமதியின்றி செய்யப்படும் எவ்வித வியாபாரங்களும் சட்டத்திற்குப் புறம்பானவையாக கருத்தப்பட்டு அவை தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe