அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து எஸ்.பி.பி.க்கு ‘எழுந்து வா இசையே’ எனத் தொடங்கும் அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளர் அருண் குமாரசாமி இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந்தன், கிருஸ்ண குமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா,மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் பாடியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் வொண்டர் மீடியா புரொடக்ஷன் ‘எழுந்து வா’ இசையே பாடலை தயாரித்துள்ளது.