குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் அனைவரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் தாங்கள் வேலை இடங்களை விட்டு வெளியேறி தப்பியோடிய போது குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நாட்டை வந்தடைந்த 112 பேரும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.