ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தேவையான உதவிகளை வழங்கியுள்ளார்.
துபாய்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இலங்கை திரும்ப முடியாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கைக்கு திரும்புவதற்காக விமான டிக்கெட்டுகளையும் அவர் வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரனதுங்கா சார்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, டி.வி.சனகா ஆகியோருடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி வைத்தார்.

