(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை பிரதேச செயலாளராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி தற்பொழுது இடமாற்றம் பெற்று விடைபெற்று செல்லும் அல்ஹாஜ் எம். எம் நஸீர் அவர்களை கல்முனை மக்கள் சார்பாக பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.
கல்முனையன்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் கல்முனை பீட்ஷா ஹோம் ரெஸ்டூரண்டில் இடம்பெற்ற இன் நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் கல்முனையன்ஸ் போர உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளரின் சேவைகளை பாராட்டி கெளரவித்தனர்.
சுமார் 03 வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய அல்ஹாஜ் எம். எம். நஸீர் அவர்கள் தனது நியமனக் காலத்தில் ஆளுமையாக சேவைபுரிந்ததை நிகழ்வில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டியதோடு
கல்முனையன்ஸ் போரத்தினால் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி , நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.