ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை இவாஸ்ட் அமைப்பினரால் சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்ரா ) ஜும்மா பள்ளிவாசலில் சிரமதான பணி இன்று (11) காலை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித நோன்பினை முன்னிட்டு இவ் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் ,இவாஸ்ட் அமைப்பின் தலைவர் கே.ஆர் அஸ்பாக் அஹமட் தலைமையில் இடம்பெற்ற சிரமதான பணியில் அமைப்பின் அங்கத்துவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




