Ads Area

பொலநறுவை, ஹபரண வீதியில் பேருந்தில் வலிப்பு வந்த நபரை வீதியில் விட்டு சென்ற நடத்துனர்.

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்ட நபர் ஒருவருக்கு நடத்துனர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடத்துனர் இன்னுமொரு பயணியுடன் இணைந்து குறித்த நபரை பேருந்தில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

பொலநறுவை, ஹபரண வீதியின் காட்டுப் பிரதேசத்தில் பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

அதன் பின்னர் அந்த வீதியில் வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த நபரை குணப்படுத்தி ஹபரண நகரத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe