பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மைச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் உலர்ந்த நிலையில் 60 கிலோ கிரேம் நிறை கொண்ட ஒரு மூடை நெல் 3,400.00 ரூபா தொடக்கம் 3,800.00 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வரகின்றன.
அறுவடை செய்த ஈரலிப்பான நெல் 3,000.00 ரூபா தொடக்கம் தொடக்கம் 3,400.00 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .
கொரோணா தொற்றுநோயின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
இதனால் தற்போது விவசாயில் கூடுதலான அறுவடையை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.