Ads Area

துபாய்க்கு வேலைக்கு சென்ற 4 தமிழக பெண்கள் காப்பாற்றும்படி கண்ணீர் மல்க வீடியோ.

துபாய்க்கு வீட்டு வேலைக்காக சென்ற 4 தமிழக பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். 

சென்னை தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி,வடிவு,வள்ளி மற்றும் திருவற்றியூர் பகுதியை சேர்ந்த கவிதை என்ற இந்த 4 பெண்கள் அங்கு வேலைக்காக சென்ற நிலையில் கடந்த 2 மாதங்களாக இவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் தங்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளனர். 

அதில் ஒரு பெண்மணி பேசுகையில் தாங்கள் மிகவும் கஷ்ப்படுகிற குடும்பம் எனவும் தன்னுடைய 3 குழந்தைகளுக்காக துபாய் வந்ததாகவும், செருப்பால் அடிப்பதாகவும்,கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் வீட்டில் அழைத்து பேசக்கூட கைபேசி கொடுப்பதில்லை எனவும் தங்களை காப்பாற்றும்படி தமிழக முதல்வர் மீட்கும்படியும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe