Ads Area

முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக அறிவித்த நலத்திட்டங்களை வரவேற்கிறேன் - நாமல் ராஜபக்ஷ.

சம்மாந்துறை அன்சார்.

தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்திய ரூ 317.40 கோடி செலவில் நலத்திட்டங்களை அறிவித்தமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ அவர்கள், 2009 ல் போர் முடிந்த பிறகு, மஹிந்த ராஜபக்ச அரசு தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அகதிகளை மீள இலங்கைக்கு வரவேற்றது. புள்ளிவிவரங்களின்படி, 3,567 குடும்பங்கள் UNHRC வசதி உதவியுடன் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்பிய அகதிகளுக்கு  வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாடு திரும்பும் அனைத்து அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் மற்றும் அவர்கள் தங்களின் வாழ்க்கையை மீண்டும் அமைதியாக தொடங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe