( எம். என். எம். அப்ராஸ்)
கொரொனா தொற்று நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சாய்ந்தமருது பிரதேசத் தில் அத்தியாவசிய தேவையின்றி நடமாடி திரிந்தோர் மீது அண்டிஜன் பரிசோதனை இன்று (29)முன்னெடுக்கபட்டிருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க, சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே. எம் .நிஸ்தாரின் ஒருங்கினைப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார உத்தியோகத்தகர்கள் ,பாதுகாப்பு பிரிவினர் இணைந்து சாய்தமருது கடற்கரை பகுதி ,வீதிகளில் வீணாக நடமாடியவர்களுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.