( எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்குஇரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் திங்கள் முதல் வியாழன் வரை ( 30/08/2021- 02/09/2021) நான்கு நாட் களுக்கு (காலை 8.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை ) இடம்பெறவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி ஏ. ஆர் . எம். அஸ்மி தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் இதனை தெரிவித்தார் மேலும் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் , குறித்த தடுப்பூசியினை பெற வருவோர் கட்டாயம் முதலாவது தடுப்பூசி பெற்ற அட்டையினை கொண்டு வர வேண்டுமென்றும் ,பொதுமக்கள் சிரமமின்றி இலகுவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முகமாக தெற்கு சுகாதார பிரிவில் கிராமசேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களில் தடுப்பூசி செலுத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் தடுப்பூசியை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியுமென மேலும் தெரிவித்தார் .
இதன்படி கல்முனை பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை , அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் , அல் - பஹ்ரியா தேசிய பாடசலை, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திலும் , மருதமுனை பகுதியில் அல் - மனார் மத்திய பாடசாலை , அல்- மதீனா வித்தியாலயத்திலும் பெரிய நீலாவனை பகுதியில் ஷரீப்புதீன் வித்தியாலயத்திலும் ,நற்பிட்டிமுனை பகுதியில் அல்- அக்ஸா மகாவித்தியாலயத்திலும் என கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் 08 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது .
எனவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்று கொள்ள முடியுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.