தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டின 3 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என குவைத் அல்-அன்பா செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் 14 நாட்களின் பின்னர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் மேலும் அவர்களை நாடுகடத்துவதா இல்லையான என்பதை நீதிமன்ற விசாரனைகளின் பின்னர் அறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே ஓட்டுனர் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டிச் சென்ற 3 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஆகவே குவைத்தில் வாழும் இலங்கை-இந்தியர்கள் குவைத் நாட்டின் போக்குவரத்துச் சட்டங்களை மதித்து ஓட்டுனர் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள். மீறும் பட்சத்தில் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்.
SOURCE ARABTIMES