Ads Area

மெரைன் டிரைவ் தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

மெரைன் டிரைவ் (கரையோரபாதை) யின்   தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையில் நீடிக்கும் பணிக்கான   சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளது.   

- தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான 17 கி.மீ    வீதி நிர்மாணப் பணிகள் விரைவில்  ஆரம்பிக்கப்படும்.  

- ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான  கரையோர பாதையை நீடிக்கும்  திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு  மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா  நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான 17 கி.மீ.வீதியின் நிர்மாணப்  பணிகள் விரைவில்  ஆரம்பிக்கப்படும். உத்தேச  தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதிக்காக  ரூ. 38 பில்லியன் செலவிடப்படும். இந்த  வீதியை நிர்மாணிப்பதன் காரணமாக    காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ. 21 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-காலி பிரதான வீதியில்  போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட  கரையோர பாதையின்  ஆறு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது.

இராமகிருஷ்ண  வீதியில் இருந்து மெல்பெர்ன் அவென்யூ வரை, மெல்பெர்ன் அவென்யூவில் இருந்து கிளென் எபெர் பிளேஸ் வரையும் , க்ளென் எபெர்  பிளேஸ் முதல் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரை, இராமகிருஷ்ண வீதியில் இருந்து  பேஸர் அவென்யூ வரை , கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம்  முதல் ரன்முத்து ஹோட்டல் வரை  மற்றும்  பேசர்   அவென்யூவில் இருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரை தற்பொழுது நிர்மாணப் பணிகள்  நிறைவடைந்துள்ளன என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


ஊடகப் பிரிவு 

நெடுஞ்சாலை அமைச்சு

0112868710



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe