Ads Area

சொறிக்கல்முனை பிரதேசத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள்

 எம்.எம்.ஜபீர்)

சொறிக்கல்முனை பிரதேசத்தில் இன்று நள்ளிரவு உட்புகுந்த காட்டு யானைகள் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன.

 ஊருக்குள் உட்புகுந்த யானை அரிசி ஆலையை உடைந்து நெல் மூடைகள் சேதப்படுத்தப்பட்டு, மதிப்புகள், நெற்களஞ்சியங்கள், வாழை மரங்கள், பயிர்கள், வேலிகள் உள்ளிட்ட உடைமைகளையும் தேசப்படுத்தியுள்ளன.  இதனால் இப்பிரதேச மக்கள் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

பகல் வேளைகளில் கிட்டங்கி நாணல் பிரதேசத்தில் ஒழிந்திருக்கும் யானைகள் இரவு வேளையானதும் பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்குள் உட்புகுந்து வருவதானால் மக்கள் விழித்திருந்து அச்சதுடனேயே இரவு பொழுதை கழிக்க வேண்டும்.

இரவு வேளைகளில் கிராமத்தினுள் வரும் யானைகளை பிரதேச மக்கள் பட்டாசு கொழுத்தி தீ வைத்து விரட்டி வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe