Ads Area

மஹியங்கனை மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை அறைகள்.

பதுளை மாவட்டத்தை பொறுத்த மட்டில் தற்போது மஹியங்கனை பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் கோவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மஹியங்கனா மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், மஹியங்கனை மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை வார்டு.( சிகிச்சை அறைகள்). இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகேவின் வேண்டுகோளின் பேரில் நிதி உதவி பெற்றன.. தற்காலிக கோவிட் சிகிச்சை பிரிவு நேற்றைய தினம் (31) காலை மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் செனரத் பண்டாரவிடம் கையளித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், புதிய கோவிட் சிகிச்சை அறைகள் மருத்துவ உபகரணங்கள் உட்பட நோயாளிகளுக்கு வசதியாக நன்கொடைகள் வழங்கப்பட்டன.

கிராமப்புற மற்றும் பள்ளி விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகம  , ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் அனுர விதானகமகே, அப்பகுதியின் அரசியல் தலைமை, ஊவா தலைமை செயலாளர் பி.பி. விஜேரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம, ஊவா மாகாணசபை  செயலாளர் மங்கள விஜேநாயக்க, ஊவா மாகாண சுகாதார செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மஹியங்கனை பிரதேச செயலாளர் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதுளை பிராந்திய செய்தியாளர் - இரா.சுரேஸ்குமார் 0714551010





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe