Ads Area

எவ்வாறான சேதனப் பசளைகளை எம் வயற்காணிகளுக்கு இடவேண்டும்?

Mohamed Firos

நம் அனைவர் மத்தியிலும் பல்வேறு வகையான சந்தேகங்கள் நெற்செய்கையின் பசளைப் பிரயோகத்தில் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இம்முறை அரசு அசேதன பசளைகளை வழங்காது சேதனப் பசளையினூடாக நெற்செய்கையினை மேற்கொள்ள வேண்டுமென கூறியிருக்கும் நிலையில் மக்கள் பல்வேறு வகையான பதற்ற நிலையினை கொண்டுள்ளனர். எவ்வாறு நாம் இந் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என. எம்மைப்பொறுத்தவரை நெற்ச்செய்கைக்கான சரியான கோட்பாட்டினை புரிந்து இம்முறை இதனூடாக வெற்றிகொள்ள முயற்சிப்பதை விட்டு அச்சமடைவது எமது இயலாமையையே வெளிக்காட்டுகின்றது. 

எம்மைப் பொறுத்தவரை எமக்கு இருக்கின்ற பாரிய பிரச்சினை நைதரசன் மற்றும் பொசுபரசு பெறுவதில் உள்ள சிக்கல் நிலையே. இதற்கான தீர்வு தான் என்ன? பார்க்கலாம். 

அதற்கு முதலில் இம்முறை சேதன முறையிலான நெற்செய்கையில் அரசினுடைய பசளைச் சிபாரிசு ஒரு ஹெக்டயருக்கானது வருமாறு – 

500 கிலோகிராம் போசணை சேர்க்கப்பட்ட சேதனப் பசளை

315 கிலோகிராம் சிறுமணியாக்கப்பட்ட கடல் புல் 

60 கிலோகிராம் பொட்டாசியம் குளோரைட்டு 

இவை எமக்கு அரசு வழங்கத் தீர்மானித்துள்ளது. 

வருவோம் விடயத்திற்கு இங்கு நாம் சேதனப் பசளை பிரயோகத்திற்கு எவ்வாறான சேதனப் பசளை தெரிவு செய்ய வேண்டும் எக் கால கட்டத்தில் இவை இடப்பட வேண்டும் எனபதே இங்குள்ள முக்கியமான விடயம். 

மேலே குறிப்பிட்டுள்ள மொத்த பசளைச் சிபாரிசானது அடிக்கட்டை மற்றும் 2ம், 4ம், 6ம், 8ம் வாரங்களில் நாம் பசளைப்பிரயோம் மேற் கொள்ள வேண்டும் எவ்வளவு இடவேண்டும் எவ்வாறு இடவேண்டும் என்பதை முழுமையாக வீடியோ பதிவாக இடுகின்றேன். 

இங்கே நாம் அடிக்கட்டுப் பசளையாக இடுகின்ற சேதனப்பசளையில் கட்டாயம் பொசுபரசு சேர்த்து உள்ள சேதனப் பசளையாக இருக்க வேண்டும். வெறும் சேதனப் பசளையாக இன்றி அதிகளவு பொசுபரசு சேர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்காக இந்த சேதனப் பசளை உற்பத்தி செய்யும் போது எப்பாவெல பாறைப் பொசுப்பேற்று சேர்த்து உற்பத்தி செய்யவேயண்டும் பொசுபரசினுடைய உள்ளடக்கத்தினை அதிகரிப்பதற்காக. நான் இங்கு கூறுகின்ற விடயங்கள் எமது அம்பாரை மாவட்ட நெற்செய்கையைப் பற்றி மாத்திரமே. 

இவற்றுடன் நான் குறிப்பிட்டது போன்று 2ம், 4ம், 6ம் மற்றும் 8ம் வாரங்களில் நாம் இடுகின்ற பசளைகளுடன் நைதரசன் சேர்க்கப்பட்ட சேதனப்பசளை இட வேண்டும் இதற்காய் நாம் அதிகளவு நைதரசன் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேதனப் பசளைகளை தெரிவு செய்ய வேண்டும் அதாவது உற்பத்தி செய்யப்படும் போது அதிகளவு பச்சை இலைகள் மற்றும் மாட்டினுடைய சிறுநீர் போன்றவற்றை நாம் உபயோகிக்கலாம். 

எனவே எமது சேதனப் பசளைத் தெரிவானது கட்டாயம் அடிக்கட்டைப் பசளையாக இடும் போது அதிகளவு பொசுபரசு கொண்டதாகவும் அதற்கு பின் 2ம், 4ம், 6ம் மற்றும் 8ம் வாரங்களில் இடப்படுபவை நைதரசன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தவிடயத்தை சரியாக பின்பற்றாவிட்டால் நாம் சேதன பசளை பயன்படுத்தி செய்கின்ற நெற்செய்கையில் தோல்வியடைந்து விடுவோம். 

இவை தொடர்பாக நிறைய விடயங்கள் இருக்கின்றன அவற்றை நான் ஒரே பதிவில் வீடியோவாக பதிவிட முயற்சிக்கின்றேன் எனது  youtube page இல் . https://youtu.be/7c5siusiml0

கடைகளில் கொள்வனவு செய்ய இருக்கின்றவர்கள் கட்டாயம் இதனை கவனத்தில் கொண்டு உரிய சேதனப் பசளையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அது மாத்திரமன்றி  SLS இனால் 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தர நியமங்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது சேதனப்பசளைகளில் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்னும் நிறைய விடயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe