Ads Area

எல்லவல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் நீராடுவதற்கும் தற்காலிக தடை...!!!!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்ட எல்லவல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் நீராடுவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபை நேற்று (21) அறிவித்தது.

எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக பிரதேச சபைத் தலைவர் ஆர். டீ. ஹரமானிஸ் தெரிவித்தார்.

நீர்வீழ்ச்சி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe