ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்ற ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.ஐ.நா.
ஆனால், இந்த மனிதநேய உதவியிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்யப்படும் உதவியிலும் பெண்களைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் தடை விதித்தனர்.
இதன் காரணமாக தலிபான்கள் ஆட்சிக்குவந்தபின் ஏராளமான ஊடகங்கள் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் பர்ஜானா அயூபி என்ற பெண் பத்திரிக்கையாளர்கள் வேலையிழந்த நிலையில் தனது குடும்பத்தைக் காக்க காபூல் நகர சாலையில் துணி வியாபாரியாக மாறிவிட்டார்.
டோலோ சேனலுக்கு பர்ஜானா அளித்த பேட்டியில், "ஏராளமான ஊடகங்கள் தலிபான்கள் ஆட்சிக்குப்பின் மூடப்பட்டதால், பெண் பத்திரிகையாளர்கள் வேலையிழந்துவிட்டனர். என் குடும்பத்தினரைக் காக்க வேறு வழி தெரியாததால், சாலையோரத்தில் வியாபாரம் செய்யத் தள்ளப்பட்டேன். சர்வதேச சமூக, ஊடகங்கள் இங்குள்ள நிலையை கவனித்து, பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் கண்காணிப்பு "ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலைக் கண்காணித்து வருகிறோம். அங்குள்ள பத்திரிகையாளர்கள் நிலை பற்றியும் பார்த்துவருகிறோம். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு எட்ட முயற்சிப்போம்.
ஆப்கானிஸ்தான் தேசிய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மஸ்ரர் லட்பி கூறினார் "ஆப்கானிஸ்தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின், ஊடகத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டமாக ஆபத்தான பணியாளர்கள் பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டனர்
thank you hindutamil
